உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவம்: சிதம்பரத்தில் மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் : 

                       அண்ணாமலைப் பல்கலை., மாணவர்கள் இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை கேட்டு சிதம்பரத்தில் மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.,யில் மாணவர்கள் இறந்த சம்பவத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும், மாணவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் கஞ்சித்தொட்டி அருகே மா.கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மூசா முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர்கள் நடராஜன், ரவீந்திரன், உதயகுமார், நகர செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், பிரசாத் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior