உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

ஊனமுற்றோர்களுக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு

கடலூர் : 

                 கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் இணைந்து, ஊனமுற்றோருக்கு கடன் வழங்க பயனாளிகள் தேர்வு நிகழ்ச்சி கடலூரில் நடந்தது.

                 மண்டல இணைப் பதிவாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வங்கி மேலாளர் முத்துக்குமரன் வரவேற்றார். தனி அலுவலர் மிருணாளினி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலர் சீனுவாசன் பங்கேற்று பயனாளிகளை தேர்வு செய்தார்.இதில் தேர்வு செய்யப்படுவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் தகுதியுடைவர்களாவர். மேலும் 40 சதவீதம் ஊனமுடையவர்களாக இருக்க வேண்டும். உதவிப் பொதுமேலாளர் மோகன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior