உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் காப்பியடித்த 9 பேர் வெளியேற்றம்

கடலூர் : 

                   கடலூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் காப்பியடித்த 3 மாணவிகள் உட்பட 9 பேர் தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த முதல் தேதி துவங்கியது. முதல் தேதி மற்றும் 2ம் தேதி மொழித்தேர்வு நடந்தது. நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் 3 பேரும், தொழுதூரில்  3 மாணவிகள் ஒரு மாணவர் உள்பட 4 பேரும், சிறுபாக்கம் பள்ளி மாணவர்கள் 2 பேரும் காப்பி அடித்ததற்காக வெளியேற்றப்பட்டனர். மாவட்டத்தில் ஆங்கிலத் தேர்வில் மொத்தம் 9 பேர் தேர்வுதுறையின் விதிகளை மீறி காப்பியடித்த குற்றத்திற்காக மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior