உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

கைத்தறி கண்காட்சி

நெய்வேலி:

                      நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கைத்தறியை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் மேற்கொண்ட இக் கண்காட்சியில் தமிழக அரசின் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தாரின் விதவிதமான சேலை ரகங்கள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கைக்குட்டைகள், வேஷ்டிகள், துண்டுகள் ஆகியன பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஆர்வமுடன் பார்வையிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் தங்களுக்குத் தேவையான கைத்தறி துணிகளை வாங்கிச் சென்றனர். முன்னதாக, கண்காட்சியை கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பி.குப்புராஜ் திறந்துவைத்தார். முதல்வர் அரங்கராசன் முன்னிலை வகித்தார். கல்லூரி துணை முதல்வர் ஜி. தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior