உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

தீ விபத்தில் மூதாட்டி காயம்

கிள்ளை : 

                     சிதம்பரம் அருகே கிள்ளையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூதாட்டி காயம் அடைந்தார். சிதம்பரம் அருகே கிள்ளை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆராயி(78). இவர் நேற்று முன் தினம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கும் போது விளக்குப்பொறி பட்டு தீ பிடித்தது. இதனால் ஆராயிக்கு காலில் காயம் ஏற்பட்டது.  தீயை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அணைத்தனர். இதில் காயம் அடைந்த ஆராயி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த திடீர் விபத்தால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior