உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

பள்ளி மாணவிகள் இருவர் கடத்தல்


பரங்கிப்பேட்டை : 

                 பரங்கிப்பேட்டையில் பள்ளி மாணவிகள் இருவரை ஆட்டோ டிரைவர்கள் கடத்தி சென்றுவிட்டதாக மாணவிகளின் பெற்றோர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

               பரங்கிப்பேட்டை அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த செல்வம் மகள் நிவேதா (13). பரங்கிப் பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகள் செவ்வந்தி (16). அதே பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரையும் ஆட்டோ டிரைவர்களான பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ், சின்னூரை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றுவிட்டதாக தெரிய வந்தது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் புகழேந்தி விசாரணை நடத்தி வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior