உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

உளுந்து பயிரை சேதப்படுத்திய 2 பேருக்கு வலை

சேத்தியாத்தோப்பு : 

            சேத்தியாத்தோப்பு அருகே உளுந்து பயிரை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சேத்தியாத்தோப்பை அடுத்த பெரியநற்குணத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது நிலத்தை அதே ஊரை சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். குத்தகை காலம் முடிந்த நிலையில் நிலத்தை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என ரமேஷ் கேட்டுள்ளார்.

                   நிலத்தில் தற்போது உளுந்து பயிரிட்டுள்ளதாகவும், அதை அறுவடை செய்த பின் தருவதாகவும் ராமலிங்கம் கூறினார். ஆத்திரமடைந்த ரமேஷ், அவரது சகோதரர் ராமசாமி இருவரும் சேர்ந்து உளுந்து பயிரிட்டிருந்த வயலில் ஏர் உழுது  சேதப்படுத்தியுள்ளனர். சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து ரமேஷ், ராமசாமியை தேடிவருகின்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior