உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு வலை


கடலூர் : 

               கடலூர் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் துறைமுகத்தை அடுத்த சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் லட்சுமணன்(50). அதே  பகுதியைச் சேர்ந்தவர் நல்லத் தம்பி இவரது மகள் காவேரி(9). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் துறைமுகத்தில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

            கடந்த 2ம் தேதி லட்சுமணன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த காவேரியை  மாடிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த காவேரி  அழுதுகொண்டே வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட காவேரியை உறவினர் கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் சிங்காரத்தோப்பு பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சம்பவம் குறித்து மனித உரிமைகள் அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இது குறித்து புகாரின் பேரில்  துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து லட்சுமணனை தேடி வருகின்றனர். லட்சுமணன் மீது இதே போன்று வழக்கு ஒன்று கோர்ட் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior