உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

மாணவன் தூக்கு போட்டு தற்கொலை

பண்ருட்டி : 

                 பண்ருட்டி அருகே பள்ளிக்கு செல்ல கட்டாயப்படுத்தியதால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காந்திநகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் வரதட்சணை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார். இவரது மகன் அஜித்குமார்(14).  இவரது சித்தப்பா தனசேகர், தனவேல் மற்றும் பாட்டி  ஆகியோர் பராமரிப்பில்  அஜித்குமார் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த ஒரு வாரமாக அஜித்குமார் பள்ளிக்கு செல்லவில்லை.

                 இதுகுறித்து பள்ளியின் சார்பில் அவரது பாதுகாவலருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனால்  கடந்த 3ம் தேதி அஜித்குமாரை அவரது சித்தப்பா தனவேல்  பள்ளிக்கு அழைத்து சென்று விட்டார்.  பின் மாலை வீடு திரும்பி அஜித் குமார்  இரவு 7 மணிக்கு  பிறகு  காணவில்லை.  இந்நிலையில் நேற்று முந்திரிதோப்பில் அஜித்குமார் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior