உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


கடலூர் : 
 
               காலி பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடக்க கல்வித் துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்களை மீண்டும் பணியமர்த்தும் முடிவை திரும்ப பெற வேண்டும். நியமன நாள் முதல் மொத்த பணிக் காலம் கணக்கிட்டு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு அளித்திட திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிற்றரசன் தலைமை தாங்கினார். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், பொருளாளர் அறிவழகன், ஆரோக்கியதாஸ், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior