உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 05, 2010

கார் மோதி மூதாட்டி சாவு


புவனகிரி : 

              புவனகிரி அருகே  கார் மோதி மூதாட்டி இறந்தார்.புவனகிரி அருகே ஆதிவராகநல்லூரை சேர்ந்தவர் இளையபெருமாள் மனைவி ராஜாமணி(60). கூலித்தொழிலாளி.  நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது சிதம்பரம் நோக்கி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்தார். இது குறித்து அவரது மகன் ஆறுமுகம் புகார் செய்ததையடுத்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior