உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 14, 2010

பிளஸ்-2 தேர்வு முடிவு: தூத்துக்குடி மாணவன் பாண்டியன் முதலிடம்


 
                       பிளஸ்-2 தேர்வை 7,43,822 மாணவ- மாணவிகள் எழுதி இருந்தனர். இன்று காலை தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர்களில் முதல் 3 இடங்களை 9 மாணவ - மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

 
                தூத்துக்குடி எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆர்.பாண்டியன் மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் 1200 மதிப்பெண்களுக்கு 1187 மார்க் எடுத்துள்ளார்.

மாணவர் ஆர்.பாண்டியன் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ்- 194

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 200

வேதியல் - 200

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1187



மாணவர் பாண்டியன் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



மாநிலத்தில் 2-வது இடத்தை 2 மாணவிகளும், ஒரு மாணவரும் பெற்றுள்ள னர். அவர்கள் மூவரும் 1200 மதிப்பெண்களுக்கு 1186 மதிப்பெண்கள் வாங்கி உள்ளனர்.

அவர்கள் விபரம் வருமாறு:-



நாமக்கல் மாவட்டம் பாண்ட மங்கலத்தில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஆர்.சந்தியா 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 196

ஆங்கிலம் - 191

இயற்பியல் - 200

வேதியல் - 199

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எஸ்.வி.மந்தீர் மேல்நிலைப்பள்ளி மாணவி சி.காருண்யாவும் 1186 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 195

ஆங்கிலம் - 195

இயற்பியல் - 198

வேதியல் - 198

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



ஊத்தங்கரை எஸ்.வி. மந்தீர் பள்ளி மாணவர் எம். தினேஷ் 1186 மதிப்பெண்கள் எடுத்து 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் ஒவ்வொரு பாடத்திலும் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 200

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1186



மாநிலத்தில் முதலிடம் பிடித்த மாணவர் பாண்டியன் போலவே மாணவர் தினேசும் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஆங்கில பாடங்களில் மாணவர் தினேசுக்கு ஓரிரு மதிப்பெண்கள் குறைந்ததால் அவர் நூலிழையில் முதல் இடம் பிடிப்பதை தவறவிட்டு விட்டார்.

           மாநிலத்தில் 2-வது இடத்தை பிடித்த 3 பேரில் 2 பேர் ஊத்தங்கரை எஸ்.வி. மந்தீர் பள்ளி மாணவர்- மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

              3-வது இடத்தை 5 மாணவ- மாணவிகள் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த 5 பேரும் தலா 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

அவர்கள் பற்றிய விபரம் வருமாறு:-


1. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சி.வி.பி.ஏ.சி.ஆர்.ஆர். மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி. பிரதக்சனா 1185 மதிப் பெண்கள் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு பாடத்திலும் அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 194

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 199

வேதியல் - 200

உயிரியல் - 199

கணிதம் - 200

மொத்தம் - 1185



ஈரோடு திண்டல் பி.வி.பி. மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.அபிநயா 1185 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 192

இயற்பியல் - 200

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200
மொத்தம் - 1185



                 மாணவர்கள் பாண்டியன்தினேஷ் போல மாணவி அபிநயாவும் 4 பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். முதன்மை சிறப்பு பெற்ற மாணவிகளில் அபிநயா மட்டுமே 4 பாடங் களில் 200க்கு 200 மதிப்பெண்களை எட்டிப்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவி எஸ்.மனோசித்ராவும் 1185 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அவரது மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 195

ஆங்கிலம் - 192

இயற்பியல் - 199

வேதியல் - 199

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



அரியலூர் அரசு நகர் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி மாணவர் அண்டோ நசரேனும் 1185 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

அவரது மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-



தமிழ்- 193

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 199

வேதியல் - 200

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி ஸ்ரீவித்யா சம்பத் 1185 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தை பெற்றவர்களில் ஒருவராக உள்ளார்.

தமிழை முதல் பாடமாக கொண்டு படித்த சென்னை மற்றும் புறநகர் பகுதி மாணவ- மாணவிகளில் மாணவி ஸ்ரீவித்யா சம்பத் மட்டுமே மாநில அளவில் முதன்மை சிறப்பை பெற்றுள்ளார்.



அவர் பாட வாரியாக பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம் வருமாறு:-


தமிழ்- 196

ஆங்கிலம் - 193

இயற்பியல் - 198

வேதியல் - 198

உயிரியல் - 200

கணிதம் - 200

மொத்தம் - 1185



                         மாநிலத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் 3 இடங் களை மொத்தம் 9 மாணவ- மாணவிகள் பிடித்துள்ளனர். இவர்களில் 3 பேர் மட்டுமே மாணவர்கள் 6 பேர் மாணவிகள் ஆவார்கள். மாநில அளவில் வழக்கம் போல மாணவிகள்தான் அதிகபட்சமாக 88 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். என்றாலும் இந்த தடவை முதல் இடத்தை மாணவர் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior