உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

அரசு அலுவலர்கள் பதவி உயர்வுக்கான தேர்வு


கடலூர் : 

                    அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வு கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் துவங்கியது. அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக தேர்வு எழுதுகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலர்களுக்கான துறை தேர்வு கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடக்கிறது. நேற்று வருவாய், கல்வி, நீதி, தீயணைப்பு, ஊரக வளர்ச்சித் துறை உட்பட 14 பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆகியோர் பதவி உயர்வுக்கான தேர்வு எழுதினர். மாஜிஸ் திரேட், தாசில்தார் உள் ளிட்ட பலர் தேர்வு எழுதினர். கடலூரில் நேற்று 286 பேர் தேர்வு எழுதினர். வரும் 31ம் தேதி வரை துறைத் தேர்வுகள் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior