உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

போலீசை தாக்கிய வழக்கு: ஒருவர் கைது

விருத்தாசலம் : 

                     இன்ஸ்பெக்டரை கல்வீசி தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப் பட்டார். விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி காலனி பொதுமக்கள் நேற்று முன்தினம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் திருமால் உள்ளிட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சிலர் போலீசார் மீது கல் வீசி தாக்கியதில் இன்ஸ்பெக்டர் திருமால் காயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த மங்கலம்பேட்டை போலீசார் பெரியவடவாடியைச் சேர்ந்த தங்கராசுவை (45) கைது செய்தனர். மேலும் சிவசங்கரன், வடிவேல், ரவி, மணிகண்டன் உள்ளிட்ட பலரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior