உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 29, 2010

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பங்களை அனுப்ப தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர்

கடலூர் : 

              கடலூர் தலைமை தபால் அலுவலத்தில் மாணவர்கள் விண்ணப் பங்கள் அனுப்ப குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிளஸ் 2 முடித்தவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள், மேலும் வேலூர் இன்ஸ்ட் டியூட் ஆப் டெக்னாலஜிக்கு விண்ணப்பிக்க நேற்று 28ம் தேதி கடைசி நாள் என்பதாலும் ஏராளமான மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் அனுப்பி வருகின்றனர். நேற்று முன்தினம் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகம் விடுமுறை என்பதால் நேற்று கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பிக்க குவிந்தனர்.

                   அதுமட்டுமின்றி தேர்வில் தோல்வியடைந்தவர்கள்சிறப்பு தேர்வு எழுதவும், போலீஸ் துறைக்கு விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்து அனுப்பவும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கடலூர் தலைமை தபால் நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து அஞ்சலகத்தில் கூடுதலாக மூன்று கவுன்டர்களுடன் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இரவு 8 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரவு வரை ஆயிரம் விரைவு தபால்களும், 600 பதிவு தபால்களும் பெறப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior