உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம்:

                  சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 3, 4-ம் இடங்களையும், சிதம்பரம் நகரில் 2 மற்றும் 3-ம் இடங்களையும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

                விழாவுக்கு காமராஜ் கல்வி குழுமத்தின் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன் தலைமை வகித்தார். துணைச்செயலர் எஸ்.கஸ்தூரி வரவேற்றார். முதல்வர்கள் எஸ்.மீனாட்சி, ஜி.சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பி.நாராயணசாமி பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசை வழங்கிப் பாராட்டி பேசினார். மேலும் சிறப்பான பயிற்சி அளித்த பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகையை வழங்கினார். விழாவில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அறக்கட்டளை ரொக்கப் பரிசுகளும், ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பதக்கங்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள்: பிளஸ் 2 தேர்வில் மாவட்டத்தில் மூன்றாமிடத்தையும், நகரில்  2-ம் இடத்தையும் பெற்ற மாணவி எம்.விசாலாட்சி (1170) மாவட்டத்தில் 4-ம் இடமும், நகரில் 2-ம் இடமும் பெற்ற 10-ம் வகுப்பு மாணவி எம்.பிரகதா (482), நகரில் மூன்றாமிடம் பெற்ற 10-ம் வகுப்பு மாணவர் ஜி.சுகாந்த் (476) மற்றும் பாடவாரியாக பரிசுக்குரிய மாணவ, மாணவியர்கள. விழாவில் துணை முதல்வர் ஜி.ஷீலா, காமராஜ் கல்வியியல் கல்லூரி முதல்வர் என்.செல்வராஜ் (பொறுப்பு), காமராஜ் அஞ்சல் வழிக்கல்வி மைய நிர்வாக அலுவலர் டி.சந்திரசேகர், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் பி.செந்தில்வேலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior