உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி. முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசு

விருத்தாசலம் : 

                        விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட்டது. விருத்தாசலம் கிளை நூலகத்தில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருத்தாசலம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. ஆசிரியர் செல்வராசு தலைமை தாங்கினார். எழுத்தாளர் இளங்கோவன், ரங்கப்பிள்ளை, சுந்தரபாண்டியன் முன் னிலை வகித்தனர். நூலகர் விஜயலட்சுமி வரவேற்றார்.

               விழாவில் வாசகர் வட்டம் சார்பில் மாணவி சிவரஞ்சினிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட் டது. மாணவியை கவிஞர் செங்குட்டுவன், ஆசிரியர் ராமலிங்கம், பேராசிரியர் பஞ்சமுத்து, கனகசபை, மலர்தாசன், ரத்தின புகழேந்தி, கரும்பு ஆய்வாளர் சேதுராமன் ஆகியோர் பாராட்டி பேசினர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior