உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்: எல்.ஐ.சி. ஊழியர்கள் வழங்கினர்

கடலூர்:

               தொழிற்சங்க நிறுவனர் நினைவு தினத்தில், கடலூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினர். 
 
               அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிறுவனரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சரோஜ் சௌத்ரி  12-வது நினைவு தினம், கடலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், பி.எஸ்.என்.எல். மக்கள் தொடர்பு அலுவலர் என்.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, எல்.ஐ.சி. ஊழியர்கள் சார்பில், ஏழை மாணவ மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு, வி.சுகுமாறன் தலைமை வகித்தார். கிளைச் செயலர் கே.பி.சுகுமாறன் வரவேற்றார். கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், எல்.ஐ.சி. கிளை மேலாளர் முத்தையன், காப்பீட்டு ஊழியர்கள் சங்க வேலூர் கோட்ட இணைச் செயலாளர் மணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior