உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: பொதுமக்கள் உண்ணாவிரதம்


விருத்தாசலம் : 

                  இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தில் பல லட்சம் முறைகேடு நடந்ததாகவும், முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஊராட்சியில் கட்டப்பட உள்ள சமத்துவபுரத்தை வேறு கிராமத்திற்கு மாற்றுதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணன், கந்தசாமி முன்னிலை வகித்தனர். கேசவபெருமாள், சக்திவேல், கனகசிகாமணி, வடிவேல், ராணி, வள்ளியம்பாள் உட்பட பலர் ங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior