உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

எஸ்.எஸ்.எல்.சி., சிறப்புத் தேர்வு நாளை முதல் நுழைவுச்சீட்டு


கடலூர் : 

             எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு நாளை முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது..

இது குறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

                எஸ்.எஸ்.எல்.சி., மெட் ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் சிறப்பு துணைத் தேர்வுகள் வரும் 29ம் தேதி முதல் ஜூலை மாதம் 9ம் தேதி வரை நடக்கிறது. அதை யொட்டி தேர்விற்கு விண் ணப்பித்துள்ள அனைத்து தனித் தேர்வர்களுக்கும் நுழைவுச் சீட்டு நாளை 21ம் தேதி மற்றும் 22ம் தேதிகளில் வழங்கப்படுகிறது.

                பள்ளி மூலமாக விண் ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் அந்தந்த பள்ளி மூலமாக வழங்கப்படும். கடந்த மார்ச் 2010 அதற்கு முந்தைய மெட்ரிக் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளில் தோல்வியடைந்து, தனித்தேர்வராக எழுத நேரடியாக விண்ணப்பித்தவர்கள் அனுமதிச் சீட்டினை புதுச்சேரி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி செல்லபெருமாள் பேட், திண்டிவனம் மேரஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விழுப் புரம் புனித ஜான் டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம் இன்பேண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வீட்டு முகவரிக்கு அஞ்சலில் அனுப்பப்பட மாட்டாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior