உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன்பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வேண்டுகோள்


பண்ருட்டி : 

             அண்ணாகிராம வட்டாரத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயிகள் பயன் பெற தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் பிரேமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

               அண்ணாகிராமம் தோட்ட கலைத் துறை வட்டாரத்தில் நடப்பு நிதியாண்டில் 50 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் துல்லிய பண்ணையம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட் டத்தில் பயன்பெற விவசாயிகள் குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் நிலம் அவர்கள் சொந்த பெயரில் இருக்க வேண்டும்.

                   நீர் மோட்டார் சொந்தமாக வைத்திருத்தல் அவசியம். தோட்டக்கலை பயிர்களான வாழை, மரவள்ளி, காய்கறிகள், மலர்சாகுபடி ஆகியவை சாகுபடி செய்யலாம். இத்திட்டத்தின் மூலம் சொட்டு நீரில் பாசன கருவி அமைத்திட 65 சதவீத மானியம் அதிக பட்சமாக 48 ஆயிரத்து 640 ரூபாய் மானியம் அரசு மூலம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடி ஏற்றதும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீரில் கரையும் உரங்கள், முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

                 இத்திட்டத்தில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொள்ளலாம். குறைந்த கூலி ஆட்கள், பயிரின் தேவைக் கேற்ப நீர் மற்றும் உரம் வேர் பகுதியில் அளிக்கப்படுவதால் தரமான விளை பொருள், அதிக விலை, அதிக லாபம் என நன்மைகள் உள்ளது. தண்ணீரை சிக்கனமாக செலவிட வேண்டிய தருணத்தில் இருப்பதால் தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக அண்ணாகிராம வட்டார தோட்டக்கலை உதவி அலுவலர்கள் அல்லது உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior