உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாடு: கடலூர் மாவட்ட தி.மு.க.வினருக்கு ​அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு

கடலூர்:

                 கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கடலூர் மாவட்ட தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட தி.மு.க.​ செயலரும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.​ பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்து உள்ளார்.​ கடலூர் திமுகவினர் கோவையில் தங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்து உள்ளார்.

எம்.ஆர்.கே. ​ பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:​ 

                   தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,​​ 23 முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது.உலகே வியக்கும் வண்ணம் உவகையுடன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.​ தமிழ் மொழிக்கு உலகம் முழுவதும் பெருமை சேர்த்திட செம்மொழிக் காவலர் முதல்வர் கருணாநிதி தலைமையில் உலகத் தமிழ் அறிஞர்கள் கோவையில் ஒன்று கூடுகிறார்கள். மாநாட்டில் கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் 23-ம் தேதி காலை 9 மணிக்கு அனைவரும் வந்து பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.​ கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் தங்குவதற்கு கோவையில் திருச்சி சாலை சூலூரில் உள்ள ஜி.எஸ்.என்.​ திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

                       எனவே கடலூர் மாவட்டத் தி.மு.க.வினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு 23-ம் தேதி காலை 8 மணிக்கு,​​ அனைவரும் ஒன்று கூட வேண்டும்.​ கடலூர் மாவட்டத் தி.மு.க.வினர் திருச்சி,​​ கரூர்,​​ காங்கேயம்,​​ வெள்ளக்கோயில் பல்லடம் வழியாக சூலூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை வழியாக நீலாம்பூர் பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு,​​ மாநாடு நடைபெறும் இடத்துக்கு வரவேண்டும்.திமுகவினர் அனைவரும் பொதுமக்களும் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior