உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி ஓமகுளத்தில் ஒற்றைக்கால் தவம்


சிதம்பரம் : 

                    சிதம்பரத்தில் நந்தனார் நீராடிய புண்ணிய குளம் சீரமைக்கக் கோரி பக்தர் ஒருவர் குளத்தில் ஒற்றைக் காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணங்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் கணேசன் (33). நந்தனாரின் தீவிர பக்தர். ஆண்டு தோறும் நடராஜர் கோவில் தரிசனத் திற்கு வரும் போது நந்தனார் மடத் திற்குச் செல்வது வழக்கம். நேற்று ஆனித் திருமஞ்சன தரிசனத்திற்கு வந்த அவர் நந் தனார் மடத்திற்குச் சென்றார். மடம் சீரமைக்கப்படாமல் இருப்பது மற்றும் நந்தனார் நீராடிய ஓமகுளம் தூர்ந்து துர்நாற்றம் அடித்தது கண்டு வேதனையடைந்தார்.

                 உடன் நந்தனார் மடத்தை சீரமைத்து குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடுப்பில் வேப்பிலை மட்டும் கட்டிக் கொண்டு ஓமக்குளத்தில் திட்டுப் போன்ற நடுப்பகுதிக்குச் சென்று ஒற்றைக்காலில் தவக் கோலத்தில் நின்றார். சிதம்பரம் நகர போலீசார் கணேசனை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior