உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

போலி பத்திரம் தயாரித்து மோசடி : இருவருக்கு வலை

கடலூர் : 

                 கடலூரில் போலி பத்திரம் தயார் செய்து மோசடி செய்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சூரப்பன்நாயக்கன் சாவடியைச் சேர்ந்தவர் மந்திரிகுமார் (52). இவர் 2007ம் ஆண்டு பஸ் நிலையம் அருகில் கடை கட்டியபோது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனக்கு ஒரு கடை வேண்டும் என கூறி 10 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்தார். இதற்கான ஒப்பந்த பத்திரத்தை முருகன் எழுதி வாங்கிக் கொண்டார். இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டதால் ஒப்பந் தத்தை ரத்து செய்ய ஆடிட்டர் பரமேஸ்வரனிடம் சென்றனர்.

                  இருவரும் பேசி ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஒப்புக் கொண்டனர். பின்னர் ஆடிட்டர் உதவியுடன் மந்திரிகுமார் 13 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு ஒப்பந்த பத்திரத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அந்த பத்திரம் போலியானது என மந்திரிகுமாருக்கு தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான முருகன், பரமேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior