உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சாலைமறியல்

விருத்தாசலம்:

               விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.விருத்தாசலம் சித்தலூர் ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது.​ இதை வழக்கறிஞர் கிருஷ்ண கதிரவன்,​​ குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வந்தார்.

                           இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சித்தலூர் காலனியைச் சேர்ந்தவர்கள் இந்த இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் எனக் கூறி 17 குடிசைகளை அமைத்தனர். தகவல் அறிந்த கிருஷ்ண கதிரவன் மற்றும் அவரது ஆள்கள் ஞாயிற்றுக்கிழமை காலை குடிசைகளை தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.​ இந்நிலையில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்,​​ காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட அலுவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

              பின்னர்,​​ போலீசார் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன்,​​ சங்கரநாராயணன் மற்றும் கோவிந்தராசு ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் கைது செய்யப்பட்டதை அறிந்த வழக்கறிஞர்கள் சந்திரசேகரன்,​​ விஜயகுமார்,​​ ரங்கநாதன்,​​ இளங்கோவன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள்,​​ மோதலில் இரு தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.அந்த தரப்பினர் தாக்கியதில் வழக்கறிஞர் கிருஷ்ணகதிரவன் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.​ எனவே அவர்கள் தரப்பிலும் வழக்கு பதிவு செய்து,​​ கைது செய்ய வேண்டும் எனக் கூறி காவல் நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

                பின்னர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்,​​ வட்டாட்சியர் ஜெயராமன்,​​ காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மற்றொரு தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார்  கூறியதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior