உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

அண்ணா பல்கலை.யில் பி.சி., எம்.பி.சி.-க்கு எத்தனை இடம்?



                    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.சி., எம்.பி.சி. என வகுப்பு வாரியாக உள்ள  இடங்களை வைத்து, அதில் சேருவதற்கு இடம் கிடைக்குமா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
 
                   சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 156 இணைப்பு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கு இணைப்பு தகுதி வழங்குதல், தேர்வு நடத்துதல் உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொள்கிறது. இதனால் அந்தப் பல்கலைக்கழகத்தால் முன்பு போல் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை; அதில் ஆராய்ச்சிகளின் தரம் குறைந்து வருகிறது; அதனால், அந்தப் பல்கலைக்கழகத்தை ஏற்கெனவே இருந்ததுபோல் ஒருமை வகை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வா.செ.குழந்தைசாமி, மு. ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.அதன்படி, இணைப்பு கல்லூரிகளைக் கையாள்வதற்காக அண்ணா தொழில்நுட்பப்  பல்கலைக்கழகம் (சென்னை) என்ற பல்கலைக்கழகத்தை உருவாக்கி தமிழக அரசு கடந்த சனிக்கிழமை (ஜூன் 19) உத்தரவிட்டுள்ளது. 
 
             அதனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே இருந்தது போல் கிண்டி பொறியியல் கல்லூரி (சி.இ.), அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி (ஏ.சி.டெக்), குரோம்பேட்டை எம்.ஐ.டி., கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றை உள்ளடக்கிய அண்ணா ஒருமை வகை பல்கலைக்கழகமாக மீண்டும் செயல்படவுள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வியின் தரம் மேலும் உயரும் என்றும், அதில் மாணவர் சேர்க்கைக்கு இந்த ஆண்டு கடும் போட்டியிருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கு கட்ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் இருந்து 197.5 வரை பெற்ற  மாணவர்களிடையே கடும் போட்டியிருக்கும். கிண்டி பொறியியல் கல்லூரியில் 1045 இடங்கள், ஏ.சி.டெக்  கல்லூரியில் 340 இடங்கள், குரோம்பேட்டை எம்.ஐ.டி.-யில் 635 இடங்கள் என 2020 பி.இ. இடங்கள் உள்ளன.
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior