உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

வேளாண் துறையின் ஆங்கில மோகம்


விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க, கடலூர் அருகே வெள்ளக்கரை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தொடங்கப்பட்ட அக்ரி கிளினிக்
கடலூர்:

              எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற குரல் நீண்ட காலமாக தமிழகத்தில் ஒலித்து வருகிறது. ஆனால் அது தொடர்ந்து வெற்றொலியாக, சாத்தியம் அற்றதாகவே இருந்து வருகிறது.

                 தமிழக அரசு அலுவலகங்களில் கோப்புகள் அனைத்தும் தமிழில்தான் இருக்க வேண்டும் என்று, அரசாணைகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. முறையாகத் தமிழில் கோப்புகளைப் பராமரிக்க வேண்டும் என்பதற்காக, ஆட்சிச் சொல் அகராதிகளைக்கூட வெளியிட்டு உதவுகிறது தமிழக அரசு.இந்த நிலையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும் கோவையில் நடைபெற இருக்கிறது. இதற்காக வணிக நிறுனங்கள்கூட தங்கள் நிறுவனப் பெயர்களை தமிழில் எழுத வேண்டும் என்று, தமிழக அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது. ஆனால் தமிழக வேளாண் துறையோ இன்னமும் தமிழ் வாசனையை வேண்டா வெறுப்புடன் நுகர்ந்து கொண்டு இருப்பதாகவே, அதன் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தி உள்ளன. 

                     மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன், ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் சேவை மையம் வீதம் தொடங்கப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், அரசுகள் அளிக்கும் நிதியுதவி ரூ.6 லட்சம். அதில் மானியம் ரூ.3 லட்சம். வேளாண் பட்டதாரிகள், ஓய்வு பெற்ற வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு இந்த சேவை மையத்தைத் தொடங்க நிதி வழங்கப்படுகிறது. வேளாண் உயர் அலுவலர்கள்தான் இதைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார்கள்.கல்வி அறிவு போதுமான அளவுக்கு இல்லாத விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை, வேளாண்மைக்கு அரசு வழங்கும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கும், விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் கருவிகளை வாடகைக்கு வழங்குவதற்கும், இந்த சேவை மையங்கள் தொடங்கப்படுகின்றன.   

              ஆனால் வேளாண் சேவை மையம் என்றோ வேறு சொற்களிலோ தமிழில் இருக்க வேண்டிய அதன் பெயரோ, "அக்ரி கிளினிக்' . அந்த அக்ரி கிளினிக்கில் இயங்கும் சிறிய மண் பரிசோதனை நிலையத்துக்கு வேளாண் துறை சூட்டியிருக்கும் பெயர், மினி மண் பரிசோதனை நிலையம். ஏன் வேளாண் அலுவலர்களுக்கு "அக்ரி கிளினிக்' என்ற சொற்களுக்கும், "மினி' என்ற சொல்லுக்கும், தமிழ் தெரியாதா அல்லது அதைச் சொல்ல தமிழ் மொழியில் சொற்களே இல்லையா? தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறும் இந்த வேளையிலாவது, வேளாண் துறைக்கு தமிழ் மீது குறைந்தபட்ச கரிசனை இருக்கக் கூடாதா என்று நமது படிப்பறிவில்லா பாமர வேளாண் குடிமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior