உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

சிதம்பரத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:

                உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தவறிய மத்திய,​​ மாநில அரசுகளைக் கண்டித்து கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாணவரணி சார்பில் சிதம்பரம் விளங்கியம்மன்கோயில் தெருவில் திங்கள்கிழமை​ கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெ​று​கிறது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கடலூர் மாவட்ட அதிமுக செயலர் ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ 

                 ஆர்ப்பாட்டத்துக்கு மாநில மீனவரணி செயலர் கே.கே.கலைமணி தலைமை வகிக்கிறார்.​ மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலர் மு.செந்தில்அதிபன்,​​ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் டி.மணிவாசகம் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்.​ செல்வி ராமஜெயம் எம்எல்ஏ வரவேற்கிறார்.​ நகரச் செயலர் தோப்பு கே.சுந்தர் நன்றி கூறுகிறார்.​ வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலர் ஜி.சந்திரசேகரன்,​​ மாணவரணிப் பிரிவு மாவட்டச் செயலர் எம்.உமாமகேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என ஏ.அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior