உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

இறகு பந்து போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

கடலூர் :

                    மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் கடலூர் பள்ளி மாணவி வெற்றி பெற்றார். கடலூர் மாவட்ட இறகு பந்து கழகம் சார்பில் சிதம்பரம் அண் ணாமலை நகரில் மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டி நடந்தது. இதில் கடலூர் பள்ளி மாணவி பிரியதர்ஷினி 13 வயது, 16 மற்றும் 19 வயது பிரிவில் இரட்டையர் போட்டியில் முதலிடமும், பெண்களுக்குண்டான தனிப்பிரிவு இரட்டையர் போட்டியில் முதலிடமும், ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தார்.  அவருக்கு பரிசளிப்பு விழாவில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற பிரியதர்ஷினியை, மாவட்ட விளையாட்டு அதிகாரி திருமுகம், பயிற்சியாளர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior