உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

பண்ருட்டி ரயில் நிலையத்தில் முன்பதிவு தொடக்கம்

பண்ருட்டி:

               பண்ருட்டி ரயில் நிலையத்தில் கணினி மூலம் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பண்ருட்டி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள்,​​ தென்னக ரயில்வேயின் சென்னை கோட்ட இணை பொது மேலாளர் கே.கே.ஸ்ரீவத்ஸôவை வியாழக்கிழமை சந்தித்து பண்ருட்டி ரயில் நிலையத்தில் மூன்று வழிப்பாதை,​​ விரைவு ரயில்கள் நிறுத்தம்,​​ முன்பதிவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

                    இந்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடி நடவடிக்கையாக பண்ருட்டி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதி சனிக்கிழமை தொடங்கப்பட்டு முன்பதிவு டிக்கெட் உடனடியாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் டி.சண்முகம்,​​ செயலர் ஆர்.சீனுவாசன்,​​ பொருளாளர் எல்.பி.சம்பத்லால்,​​ துணைத் தலைவர் ஜெ.ஹரிஹரன்,​​ இணைச் செயலர் வி.வீரப்பன்,​​ நிர்வாகிகள் ஜெ.விஸ்வநாதன்,​​ என்.அசோக்ராஜ்,​​ ஸ்டேஷன் மாஸ்டர்கள் தரணிதரன்,​​ சுரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior