உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அனுமதி ரத்து: ஆர்.டி.ஓ., எச்ச

கடலூர் : 

          சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றால் வாகனம் சிறை பிடிக்கப்படுவதுடன் உரிமம் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

இது குறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் செய்திக் குறிப்பு:
       
                      சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பான செயலாகும். அவ்வாறு ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி ரத்து செய்யப்படும்.அதேப்போன்று பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இயக்கப்படவேண்டும். தவறினால் அனுமதி ரத்து செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior