உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

குளிர்பான பாட்டிலில் மிதந்த நச்சுப் பொருள்

கடலூர் : 

            கடலூரில் குளிர்பான பாட்டிலில் நச்சுப் பொருள் மிதந்தது.கடலூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் வேணுகோபாலபுரம் மெயின் ரோட்டில் பெட்டிக்கடை வைத்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு ஏஜன்சி மூலம் கோகோ கோலா 200 மி.லி., குளிர்பான பாட்டில்கள் வந்தன.

                   நேற்று காலை மகேந் திரன் பாட்டில்களை பிரிட் ஜல் வைப்பதற்காக எடுத்த போது அதில் ஒரு பாட்டிலில் நச்சு பொருள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இது குறித்து மகேந்திரன் கூறுகையில் 

                     "ஏஜன்ட்டிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குளிர்பான நிறுவனத்திடம் கேளுங்கள்' என கூறினார். நிறுவனத்திடம் தொடர்பு கொண்ட போது "இது குறித்து விசாரிக்க நேரில் வருகிறோம் என தெரிவித்தனர்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior