உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

எஸ்.பி., கார் விபத்து: பஸ் டிரைவர் கைது

சிறுபாக்கம் : 

             கடலூர் எஸ்.பி., கார் விபத்தில் சிக்க காரணமாக இருந்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியின் போது விருத்தாசலம், மங்கலம்பேட்டை வழியாக உளுந்தூர் பேட்டை சென்றவர் பின்னர் வேப்பூர் சென்றார். அதிகாலை 3.30 மணிக்கு தேசிய நெடுஞ்சாலையில் ஐவதுகுடி அருகே சேப்பாக்கம் மேம்பாலத்தில் கட்டுமான பணி காரணமாக திருப்பி விடப்பட்ட ஒரு வழி பாதையில் சென்ற போது திருச்சியில் இருந்து சென்னைக்கு அதிவேகமாக சென்ற அரசு பஸ் (டி.என். 32- என் 2527) எஸ்.பி.,யின் கார் மீது மோதுவது போல் சென்றது.

                இதனால் பதட்டம் அடைந்த எஸ்.பி., யின் கார் டிரைவர் சமயோசிதமாக காரை வளைத்து சாலையோர தடுப்புக் கட்டை மேல் ஏற்றினார். இதில் எஸ்.பி., காயமின்றி தப் பினார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து திருத்தணியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஞானபிரகாசத்தை (46) கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior