உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

ஆனித் திருமஞ்சன தரிசனம்: பக்தர்கள் குவிந்தனர்

சிதம்பரம் : 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடந்த ஆனித் திருமஞ்சன தரிசனத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் புரிந்தபடி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

               கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா, இரவு பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் தேரில் எழுந்தருளி நகர வீதியுலா வந்தனர்.

                  இரவு 8 மணிக்கு தேரில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டப வாயிலில் எழுந்தருள செய்யப்பட்டு சந்தனம், தேன், பால், இளநீர், விபூதி, பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது.அதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சுவாமிகளுக்கு திருவாபரண அலங்கார காட்சி, லட்சார்ச்னை, பகல் ஒரு மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு முடிந்து சரியாக 3 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் திருநடனம் ஆடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.உடுக்கை, தாளம், தம்பட்டை என வாத்தியங்கள் முழங்க சுவாமிகளின் திருநடன காட்சியை வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக் தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் ஆகியோர் தரிசன பங் கேற்றனர். டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தரிசனத்தில் பக்தர்கள் மயக்கம்: 

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை அமைதியுடனும், பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக் கும் வகையிலும் நடத்துவது குறித்து கோவில் செயல் அலுவலர், தீட்சிதர்கள், அரசு அதிகாரிகள் பங் கேற்ற ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஒ., ராமராஜ் தலைமையில் கடந்த 19ம் தேதி நடத்தப்பட்டது. கூட்டத்தில், வெயில் தாக்கம் குறையாததால் தரிசனத்தை பக்தர்கள் பாதிக் காத வகையில் மதியம் 2 மணிக்குள் முடித்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. தீட்சதர்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் நேற்று தரிசனம் மாலை மூன்று மணிக்கு காலதாமதமாக நடந்தது. அதனால் வெயிலில் பல பெண்கள் மயங்கி விழுந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு குறைவு: 

              வழக்கமாக நான்கு டி.எஸ்.பி., மேற்பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிப் படை, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, நண்பர் கள் குழு என பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்று விட்டதால் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருந்தனர். ஊர்க்காவல் படையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior