உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 21, 2010

கடலூர் சிறையில் கைதிகள் மோதல்

கடலூர்:

                கடலூர் மத்திய சிறையில் கைதிகள் சனிக்கிழமை திடீரென மோதிக் கொண்டனர்.​ இதில் ஆயுள் தண்டனைக் கைதி காயம் அடைந்தார். கடலூர் அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் நாகராஜன் ​(26).​ பல திருட்டுக் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட நாகராஜன் போலீஸôரால் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.அதே சிறையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த உமாசங்கர் ​(36) ஆயுள் சிறைத் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.​ ​ 
               ​ 
                 சனிக்கிழமை நாகராஜன்,​​ உமாசங்கர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு மோதலில் முடிந்தது.இதில் உமா சங்கர் பலத்தக் காயம் அடைந்தார்.​ அவருக்கு சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து சிறைச்சாலை காவலர் வேணுகோபால்,​​ கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.​ நாகராஜன் மீது போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior