உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

பால் உற்பத்தியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர்: 

                        கால்நடை மருத்துவமனைகளை முறையாக செயல்படுத்தி சிகிச்சை அளிக்கக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுப்பாளையம் கால் நடை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய செயலாளர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலா ளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மாதவன், நகர செயலாளர் சுப்புராயன், மாநிலக்குழு பழனி, ஒன்றிய தலைவர் குமார், மாவட்டக்குழு சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கால் நடை இணை இயக்குனர், டாக்டர்கள், ஊழியர்கள் அலட்சியத்தால் முறையான சிகிச்சை இல்லாமல் இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடலூர் பகுதியில் உள்ள அனைத்து கால் நடை மருத்துவமனைகளை முறையாக செயல்படுத்தி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்\கைகள் வலியுறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior