உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

புவனகிரி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கம்

புவனகிரி: 

                  புவனகிரி அருகே பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஐந்து மாணவர்கள் மயக்கமடைந்தனர். புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 400 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 250 மாணவ, மாணவிகள் நேற்று மதிய உணவு சாப்பிட்டனர். இதில் மாணவிகள் அனுசுயா (12), அன்புக் ரசி (12), மாணவர்கள் பிரசன்னா (11), நிஷாந்த் (9), சுபாஷ் (10) ஆகியோர் வாந்தி எடுத்து மயங்கினர். உடன் புவனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், இவர்களுடன் சாப்பிட்ட 28 மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாசில்தார் காமராஜ், பி.டி.ஓ., வாசுகி, சேர்மன் தனலட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior