உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

கிள்ளை அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு மரியாதை

சிதம்பரம்: 

                  கிள்ளை அரசு பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளிலேயே குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் ஜனாதிபதி வரை அனைத்து உயர் பதவிகளையும் வகித்துள்ளனர் என்பதை உதாரணத்துடன் சுட்டிக்காட்டியதையடுத்து கிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் வகுப்பில் சேர்ந்துள்ளனர். முதல் வகுப்பில் சேர்ந்த குழந்தைகள் தாங்கள் விரும்பும் பதவிக்கு படிப்போம் என உறுதிமொழி எடுத்து தலையில் கிரீடம் வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். ஊர்வலத்தை கிள்ளை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்ரமணியன், தலைமை ஆசிரியர் கவுரி, உதவி ஆசிரியர்கள் பர்வின் பானு, பவானி, ஆசிரியர் பயிற்றுனர் மாறன், கவுன்சிலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior