உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம் கட்ட இடம்: டி.ஆர்.ஓ., நடராஜன் பார்வை

ஸ்ரீமுஷ்ணம்: 

                     ஸ்ரீமுஷ்ணம் அருகே சமத்துவபுரம், பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு தேர்வு செய்ய உள்ள இடங்களை டி.ஆர்.ஓ., பார்வையிட்டார். ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த தேத்தாம்பட்டு கிராமத்தில் சமத்துவபுரம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இடம் சமத்துவபுரம் கட்ட போதுமானதாக உள்ளதா என்பது குறித்தும் மண்ணின் தன்மை மற்றும் வளம் குறித்து டி.ஆர்.ஓ., நடராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, காட்டுமன்னார்கோயில் தாசில்தார் விஜயலட்சுமி, மண்டல துணை தாசில்தார் தனசங்கு, ஆர்.ஐ., சுந்தரம், வி.ஏ.ஓ.,க்கள் வெங்கடாசலம், மயில்வாகணன், ஷாஜகான், தேத்தாம் பட்டு ஊராட்சி தலைவர் காந்தி செல்வராஜன் உடன் இருந்தனர். தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு பணிகளை உடனே துவங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior