உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

விழமங்கலம் நகராட்சி பெண்கள் பள்ளிக்கான இடம்: கலெக்டர் நேரில் ஆய்வு

பண்ருட்டி: 

                      விழமங்கலம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்ட பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கான இடத்தை கலெக்டர் சீத்தாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பண்ருட்டி விழமங்கலம் நகராட்சி துவக்கப் பள்ளி பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்த கலெக்டர் சீத்தாராமன் பள்ளிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டார். மேலும் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார். மேலும் நகரில் உள்ள குடிநீர் பைப் லைன்களை மாற்ற குடிநீர் வடிகால் வாரியத்துறை மூலம் பேசி நடவடிக்கை எடுக்கவும், மண்ணெண் ணெய் பங்க், நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யவும் கமிஷனர் உமா மகேஸ்வரிக்கு உத்திரவிட்டார். ஆய்வின் போது எம்.எல்.ஏ., வேல்முருகன், கமிஷனர் உமா மகேஸ்வரி, தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior