உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

மனைப்பிரிவு அனுமதி நகர ஊரமைப்பில் முதலில் பெற வேண்டும்: கலெக்டர்

கடலூர்: 

                     ஊராட்சிகள் கட்டட விதிகள் படி நகர ஊரமைப்புத் துறையில் மனைப் பிரிவுக்கு தொழில் நுட்ப அனுமதி பெறப்பட்டபின் கிராம ஊராட்சியில் அனுமதி பெற வேண்டும்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                     கூட்டு உள்ளூர் திட்டப் பணி மற்றும் புறநகர் வளர்ச்சி திட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் 5 ஏக் கர் பரப்பு வரை மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க சம்மந்தப்பட்ட உறுப்பினர் செயலருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து ஊராட்சி பகுதிகளில் 5 ஏக் கர் பரப்பு வரை சம்பந்தப்பட்ட மண்டல இயக்குனருக்கு மனைப்பிரிவு ஒப்புதல் அளிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப அனுமதி மற்றும் ஊராட்சி அனுமதி இன்றி அமைக் கப்படும் மனைப்பிரிவுகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்கப்பட மாட்டாது. அனுமதியின்றி அமைக்கும் மனைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் ஊராட்சியின் மூலம் செய்து தர இயலாது. மேலும் ஊராட்சிகளில் கட்டப்படும் அரசு கட்டடம் தவிர மற்ற எந்த பொது கட்டடங்களையும், அடுக்குமாடி கட்டடங்களையும் கட்டட நகர் ஊரமைப்பு திட்டத்தின் இணை இயக்குனர் அல்லது துணை இயக்குனரிடம் தொழில்நுட்ப ஆலோசனை பெற்று பின்பு ஊராட்சியில் அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior