உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

போக்குவரத்து மாற்றத்தால் அவதி! பொதுமக்கள் மறியல் செய்ய முடிவு

கடலூர்: 

                       கடலூர் - விருத்தாசலம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

                          கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 7ம் தேதி முதல் சாலை தடை செய்யப்பட்டதோடு போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட் டது. அதன்படி கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலை வழியாக சென்று ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி சாலையை அடைகிறது. அதே போல் விருத்தாசலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியாக சிதம்பரம் சாலைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மேலும் டவுன் பஸ்கள் மட்டுமே காரைக்காடு வழியாக இயக்கப்படுகிறது.

                    இந்நிலையில் காரைக்காடு வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அதிகளவில் தங்கள் பகுதியில் வாகனங்கள் செல்வதை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து கனரக வாகனங்கள் குள்ளஞ்சாவடி வழியாக திருப்பி விடப்பட்டது. போதிய பஸ் வசதி இல்லாததால் குள்ளஞ்சாவடியில் இருந்து முதுநகர் வரையுள்ள தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், சேடப்பாளையம், அன்னவல்லி, கண்ணாரப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லமுடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கிராம பொதுமக்களும் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனையடுத்து சேடப்பாளையம், சுப்ரமணியபுரம் உட்பட பல கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior