உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 17, 2010

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம்

விருத்தாசலம்: 

                  விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முகாம் நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து வந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைவதால் அரசு அந்தந்த பள்ளிகளிலே பதிவு செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் எஸ்.எஸ்.எல். சி., தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. அவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவும் பள்ளியில் நடக்கிறது. தலைமை ஆசிரியர் முருகேசன் பதிவினை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் வீரராகவன் தலைமையில் ஆசிரியர்கள் ராஜன், கிருஷ் ணகுமாரி, ஹேமலதா, விஜயலட்சுமி, மணிக்கொடி, உஷாகுமாரி, எழில்ராணி ஆகியோர் மாணவர்களின் சான்றிதழ் களை சரிபார்த்து பதிவு செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior