உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

2011ல் மீண்டும் தி.மு.க., அரசு: நெய்வேலியில்அமைச்சர் பூங்கோதை பேச்சு

நெய்வேலி:

          தமிழ்நாடு நாடார் பேரவையின் கடலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு நெய்வேலியில் நடந்தது.

             மாவட்ட செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். குசலவசாமி, குமாரசாமி, பழமலை, தியாகு மணிவண்ணன், ராஜமாரிப்பன், பால் சாமி, கருப்பையா முன்னிலை வகித்தனர். குருசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் தனபாலன், பொதுச் செயலாளர் கரிக் கோல்ராஜ், பொருளாளர் செல்லப் பன் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை பேசுகையில் 

             "தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர் களது முன்னேற்றத்திற் காக முதல்வர் கருணாநிதி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் நாடார் இன மக்களின் முன்னேற்றத்திற்கு காமராஜருக்கு இணையாக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார். பனை தொழில் மக்களுக்கு நன்மை பயக்கும் சிறந்த ஏற்றுமதி தொழிலாக அமைய முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கோரிக்கைகள் எடுத்துச் செல்லப்படும், 2011ல் மீண்டும் தி.மு.க., அரசு அமையும் என்பது நிச்சயம்' என பேசினார்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்

             ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு தொடர்ந்து நாடார் பேரவை பாடுபட வேண்டும்.ஒரே நேரத்தில் 12 ஆயிரம் பள்ளிகளைத் திறந்து கல்விக்காக பாடுபட்டவர் காமராஜர். சுயமரியாதை உணர்வு அதிகம் உள்ளவர்கள் நாடார் இன மக்கள். கல்வி, வணிகம் என பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ள நாம் அரசியலில் சோடை போக மாட்டோம்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior