உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்பு

சிதம்பரம்:
         மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது:

            "டெல்டா பாசனப் பகுதியில் குறுவைச் சாகுபடி பருவமாக விளங்கி வருகிறது. கடந்த காலங்களில் மேட்டூர் அணைகளில் தண்ணீர் தாமதமாக திறக்கப்படுகிறது.1999-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ம் தேதியும், 2000-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதியும், 2001-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதியும், 2002-ம் ஆண்டு மிகவும் காலதாமதமாக அக். 22-ம் தேதியும், 2003-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 29-ம் தேதியும், 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியும், 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதியும், 2006-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

             ஆனால் தமிழக அரசு கர்நாடக அரசிடமிருந்து பெற வேண்டிய ஜூன் மாதம் அளவு நீரான 10 டிஎம்சியும், ஜூலை மாதத்துக்கான 34 டிஎம்சி நீரையும் பெற்று தருவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கவலையாக உள்ளது. மேட்டூர் அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பின்னர், 76 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை 38 முறை மட்டுமே ஜூன் மாதங்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி விட்ட நிலையில் காலம்தாழ்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, மழைநீருடன் சேர்ந்து வெள்ளச் சேதத்தையும் விவசாயிகள் சந்திக்க நேரிடும் சூழல் உருவாகியுள்ளது' என கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior