உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சைக்கிள் பயணம்

கடலூர்:

         மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, தொழிலாளி விஜயகுமார் (36) சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தார்.

             கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அங்குள்ள மளிகைக் கடையில் பொருள்களைக் கையாளும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார். தி.மு.க. தொண்டரான அவர், பிறவியிலேயே வலதுகால் ஊனமுற்றவர். எனினும் நன்றாக சைக்கிள் ஓட்டுவார். அவர் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளார்.

             எனவே முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கும்பகோணத்தில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு சைக்கிள் பயணம் தொடங்கி இருக்கிறார். கடந்த 23-ம் தேதி தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கிய விஜயகுமார், எப்போது சென்னை சென்றடைவார் என்று கூறமுடியவில்லை.எனினும் சென்னை தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திப்பேன் என்று உறுதியாகத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியது:

           மாற்றுத் திறனாளிகள் திட்டத்தால் ஊனமுற்ற பலர் நல்ல பயன் அடைந்து இருக்கிறார்கள். அதற்காக நான் சைக்கிளில் பிரசாரப் பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். பகலில் மட்டும் சைக்கிளில் பயணிக்கிறேன். இரவில் ஆங்காங்கே உள்ள திமுக அலுவலகங்களிலும் திமுக தொண்டர்கள் தயவிலும் தங்கிக் கொள்வேன். எனக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்றார். திமுக தொண்டர்கள் பலர் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior