உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கடலூர் மத்திய சிறையில் ஆயுள் கைதியிடம் மொபைல் பறிமுதல்

கடலூர்:

                கடலூர் மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் கைதி ஒருவரிடம் இருந்து மொபைல் போன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.

                 கடலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் மொபைல் போன் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் ஆயுள் தண்டனை பெற்ற வேலூரைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் மற்றும் சிம்கார்டை சிறைத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இது பற்றி ஜெயிலர் வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து கைதி ராஜாவுக்கு மொபைல் போன் கிடைத்தது எப்படி என்றும், அவர் யார் யாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior