உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை : பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம்:

          வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

             வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து வந்தனர்.ஆனால் பருவநிலை மாற்றத்தாலும், நோய் தாக்குதல், பணியாளர்கள் தட்டுப்பாடு, கொள் முதல் நிலையங்களுக்கு நேரடியாக எடுத்து செல்ல முடியாத நிலை ஆகியவற்றால் காய் கறிகளை பயிரிடுவதில் தயக்கம் காட்டி வந்தனர். 

                  கடந்த இரண்டு ஆண்டுகளாக விளை நிலங்களில் உள்ள தரை கிணற்றில் கிடைக்கும் குறைவான நீரைக் கொண்டும் அதிக வேலைப்பளு, நோய் தாக்குதல்கள் இல்லாததாலும் கோழிக் கொண்டை, சம்பங்கி, டில்லி கனகாம்பரம், மல்லிகை, மரிக்கொழுந்து, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விளைவிக்கின்றனர்.கிடைக்கும் பூக்களை அருகிலுள்ள விருத்தாசலம், சேலம், ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளிலுள்ள மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி கணிசமான வருவாயை பெற்று வருகின்றனர். இதனால் விவசாயிகள் அதிகளவு பூக்களை பயிரிவதில் ஆர் வம் காட்டுகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior