உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களைச் சேர்க்க 26 வரை காலஅவகாசம் நீடிப்பு

கடலூர்:

          வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய, படிவங்களை அளிப்பதற்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார் 

             2010-ம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 1-7-2010 அன்று வெளியிடப்பட்டது.÷வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் 1-7-2010 முதல் 16-7-2010 வரை பெறப்பட்டன. தற்போது பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், மற்றும் வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்களில் அளிக்கலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior