உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 22, 2010

வடலூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி : 

            வடலூரில் மருத்துவ காப்பீட்டுத் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.

                புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் ஆலோசனை வழங்கினர். வள்ளலார் அறங்காவலர் குழு தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். வள்ளலார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் சுகாதார ஆய் வாளர்கள் சுப்ரமணியன், ஜெயக்குமார், பாண்டியராஜ், தயாநிதி, முத்துராமலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக நோய்கள், கர்ப்பப்பை நோய்கள், முட நீக்கியல் ஆகிய நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக் கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior